Ads Area

குவைத்தில் 5 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் 4 ஆசிய நாட்டவர்கள் கைது.

சம்மாந்துறை அன்சார்.

குவைத் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் 5 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த 4 ஆசிய நாட்டவர்களை கைது செய்துள்ளனர். நால்வரும் குவைத்தில் பல்வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குவைத்தில் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நடமாட்டம் மற்றும் அவர்களின் விபரங்கள் ஆதாரங்களுடன் சேகரிக்கப்பட்டு அதன் பின்னர் குறித்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நாள்வரும் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் எதும் தெரிவிக்கப்படவில்லை.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe