Ads Area

உங்களை யாரோ நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்தும் பிரபஞ்ச அறிகுறிகள்..!

 

தற்செயல் என்று நாம் நினைக்கும் பல விஷயங்கள் ஏற்கனவே உள்ளுணர்வில் தோன்றியிருக்கக் கூடும். பிரபஞ்சம் மற்றும் ஆழ்மனத்தின் ஆற்றல் அற்புதமானது. உங்களுக்கு அவ்வபோது உள்ளுணர்வு மூலம் ஏதாவது சமிக்ஞை கொடுத்துக் கொண்டே இருக்கும். சில நேரங்களில் யாராவது நம்மைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்ற உணர்வுகள் ஏற்படும். இதைப் போல ஏற்படும் உள்ளுணர்வுகள் பெரும்பாலும் எதையாவது அறிவுறுத்தும். இதுவரை சந்தித்தே இருக்காத அல்லது நினைத்து பார்க்காத ஒரு விஷயம் உங்கள் ஆழ் மனதில் தோன்றலாம். உங்களைப் பற்றி யாரோ நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான பிரபஞ்ச அறிகுறிகள் இங்கே.


முகம் அறிந்திராத நபரைப் பற்றிய கனவுகள் : இதுவரை பார்க்காத நபர் உங்கள் கனவில் அடிக்கடி தோன்றலாம். பெரும்பாலும் கனவில் நாம் பார்த்தவை, அறிந்தவை மட்டும் தான் வெவ்வேறு வடிவில் தோன்றும். ஆனால், இதுவரை நீங்கள் அறியாத நபர் கனவில் தோன்றினால், உங்களுக்கும் அந்த முகம் அறியாத நபருக்கும் ஏதோ ஒரு தொடர்பு உள்ளது. விரைவில் நீங்கள் அவரை சந்திப்பீர்கள்.


அடிக்கடி விக்கல் மற்றும் தும்மல் : சாப்பிடும் போது புறை ஏறினால், விக்கல் வந்தால், ‘யாரோ நினைக்கறாங்க’ என்பது கூறுவது மிகவும் இயல்பு. விக்கல் ஏற்படுவது, தும்மல் வருவது போன்றவை பல நாடுகளில், கலாச்சாரங்களில் பல்வேறு நம்பிக்கைகளோடு தொடர்புடையது. அடிக்கடி உங்களுக்கு விக்கல் மற்றும் தும்மல் ஏற்பட்டால், யாரோ உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.



உங்களை அறியாமலே புன்னகைப்பது : காரணம் இல்லாமல் யாரேனும் மெலிதாய் புன்னகைப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? உங்களை அறியாமலே நீங்கள் சிரித்திருக்கிறீர்களா? ‘என்ன நீ தனியா சிரிச்சிட்டு இருக்க’ என்று மற்றவர் கேட்கும் போது தான் நீங்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பதை உணர்வீர்கள். அது போல, காரணமே இல்லாமல் நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வது அல்லது உங்களை அறியாமலே புன்னகைப்பது யாரோ ஒருவர் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார் என்ற பிரபஞ்ச அறிகுறியாகும்.


அடிக்கடி மன நிலையில் மாற்றம் : உங்கள் எண்ணங்களும் சிந்தனைகளும் ஒரு சிலருடன் இணைந்திருக்கும். உதாரணமாக, ஒரே போல எண்ணங்கள் கொண்ட நண்பர்கள், கணவன் மனைவி, காதலர்கள், சகோதர சகோதரிகள் இருக்கலாம். யாரோ ஒருவருக்கு ஆபத்து ஏற்படுவது போன்ற உள்ளுணர்வு உங்களுக்குத் தோன்றும் போது, அது உண்மையாகக் கூட மாறலாம். அது போல, நீங்கள் அறியாமலே உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பவரின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் உங்களையும் பாதிக்கும். உணர்ச்சி வசப்படலாம், கோபப்படலாம் அலல்து சோகமாக உணரலாம். இது எல்லாம் உங்கள் எண்ணங்களுடன் மற்றொருவர் இணைந்துள்ளார் என்பதை உணர்த்தும் பிரபஞ்சத்தின் அறிகுறி.


உங்களை ஒருவர் காப்பாற்றும் தருணம் : நீங்கள் ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் போது, எதிர்பார்க்காத தருணத்தில் எதிர்பாராத நபர் ஒருவர் உங்களை காப்பாற்றுவது மிகவும் அரிதானது. ஆனால், பிரபஞ்ச ஆற்றலைப் பொறுத்தவரை, உங்களைக் காப்பாற்றியவர் உங்களுக்கானவர். உங்களை யாரோ காப்பாற்றுவது போல கனவு கண்டால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அப்படியான ஒருவரைத் தேடுகிறீர்கள் என்று அர்த்தம்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe