Ads Area

ரஹ்மத் பவுண்டேஷனால் நிந்தவூருக்கு ஜனாஸா குளிப்பாட்டும் கட்டில் அன்பளிப்பு.

 (அஸ்லம் எஸ்.மௌலானா)

நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனால் ஜனாஸாக்களை குளிப்பாட்டும் கட்டில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பின் நிருவாகிகள் விடுத்த வேண்டுகோளையேற்று பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் குறுகிய காலத்திற்குள் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.

நேற்று நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இதனை வழங்கி வைத்தார். இதன்போது ஜனாஸா நல்லடக்கத்துடன் தொடர்புடைய பல விடயங்கள் சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் ஜனாஸா நலன்புரி அமைப்பின் தேவைகள் தொடர்பான கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் இதன்போது ரஹ்மத் மன்சூரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேஷன் மற்றும் ஜனாஸா நலன்புரி அமைப்பு என்பவற்றின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

ஏலவே கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை உட்பட அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலுமுள்ள பள்ளிவாசல்களுக்கு ரஹ்மத் பவுண்டேஷனினால் ஜனாஸாக்களை குளிப்பாட்டும் கட்டில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe