Ads Area

சம்மாந்துறையில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் சிரமதான நிகழ்வு.

 நூருல் ஹுதா உமர்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் நெறிப்படுத்தலில், சமகாலத்தில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தல், இயற்கை சூழலைப் பாதுகாப்பது மற்றும் அதன் சுத்தத்தைப் பேணிக்கொள்ளும் நோக்குடன், பல்கலைக்கழக வளகங்களின் ஒவ்வொரு பீடத்தின் வெளி சூழலை அழகுபடுத்தும் பொதுவாக சிரமதான செய்யும் நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது.

அதன் ஒா் அங்கமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்திருக்கும் பிரயோக விஞ்ஞான பீடத்தில் வெளி சூழலை சிரமதானம் செய்யும் நிகழ்வு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.செய்னுடீன் தலைமையில் 13.12.2021 திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.செய்னுடீன், பேராசிரியா் ஏ.எம்.றஸ்மி, விரிவுரையாளா்கள், பிரதிப் பதிவாளர் மற்றும்  கல்வி சார ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe