(சர்ஜுன் லாபீர்)
கிழக்கில் ஆளணியின்படி , சுமார் 24 ஆயிரம் ஆசிரியர்கள் தேவை. எனினும் , தற்போது 20 ஆயிரம் ஆசிரியர்களே இருக்கின்றனர். சுமார் 4,000 ஆசிரியருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. என கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி.திஸாநாயக தெரிவித்தார்.
எனினும்,அண்மையில் 3 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர் . கிழக்குப் பாடசாலைகளில் பணியாற்றும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் ஆசிரியர்களாக நியமிக்கவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
சம்மாந்துறை வலயக் கல்வி பணிமனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாகாண கல்விச் செயலாளர் மேலும் உரையாற்றுகையில் : " கல்விப் புலத்தில் பல பிரச்சினைகள் உள்ளன.அவற்றுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.சரியான ஆராய்ச்சிகள் இல்லாமையே அதற்குக் காரணம்.பிரச்சினைகள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் . "ஒரு பாடசாலையைத் திறந்தால் ஆயிரம் சிறைச்சாலைகளை மூடிவிடலாம் என்பார்கள். சுகாதாரத்துக்கு அடுத்தபடியாக கல்விக்கு பில்லியன் கணக்கில் செலவுசெய்கிறார்கள். ஆனால் கல்விக்காக செலவழிக்கும் பில்லியனுக்கு கைமாறாக நாம் என்ன உற்பத்தி செய்திருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக கிழக்கு தொடர்ந்து 9 ஆவது இடத்தில் இருந்து வருகிறது. " கல்வியில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவர அனைவரும் சிந்திக்கவேண்டும். திட்டங்கள் வகுத்து அதன்படி உழைக்கவேண்டும். "அனைவருக்கும் கல்வி ' என்பது யுனிசெவ் தொடக்கம் பல நாடுகளுக்கும் பொதுவான வாசகமாகவுள்ளது .' சிறந்த எதிர்காலத்திற்கான கல்வி ' என்பதே எனது வாசகம்." கிழக்கில் பல மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாதுள்ளனர். மேசன் , தச்சு போன்ற வேலை செய்கின்றனர். அப்படியெனின் , எங்கோ ஒரு தவறு நடந்திருக்கிறது . அதனை ஆராயவேண்டும்." கிழக்கு மாகாணம் இன்னும் 3 வருடங்களில் 5 ஆவது இடத்தை அடைய வேண்டும் என்பதே எனது இலக்கு . அதற்காக நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் " என்றார் .