Ads Area

கல்முனைப் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அஹமத் சிபாக் அப்றின் வீடு சென்று கௌரவிப்பு !

 (எம்.என்.எம். அப்ராஸ்)

கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி வங்கிச் சங்க சிரேஷ்ட உதவி முகாமையாளராக கடமையாற்றும் எம்.எம்.எம்.மன்சூரின் புதல்வன் எம்.எம்.அஹமத் சிபாக் அப்றின்  கல்முனை  பிரதேச  செயலாளர்  ஜே.லியாக்கத் அலி தலைமயிலான  சமுர்த்தி பிரிவு  உத்தியோத்தர்கள் குழுவினரால் கெளரவிக்கப்பட்டார்.

கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி வங்கிச் சங்க சிரேஷ்ட உதவி முகாமையாளராக கடமையாற்றும் எம்.எம்.எம்.மன்சூரின் புதல்வன் எம்.எம்.சிபாக் அப்றின் மருத்துவபீட கற்கை நெறிக்காக வயம்ப பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டமையினைப் பாராட்டி கௌரவிக்கும் முகமாக கல்முனைப் பிரதேச செயலாளர்  ஜே.லியாக்கத் அலி தலைமையில் ,கல்முனைப் பிரதேச செயலக சமுர்த்தி தலைப்பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் ,சமுர்த்திப் பிரிவில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி  உத்தியோகத்தர்களான என்.எம்.நௌசாத், ஏ.எஸ்.எம்.ஜௌபர் மற்றும் ஏ.கமால்தீன் ஆகியோர் சிரேஷ்ட உதவி முகாமையாளர் எம்.எம். எம்.மன்சூர் அவர்களின் சாய்ந்தமருதில் உள்ள வீட்டுக்கு  நேற்று (09)பிற்பகல் சென்று அவரின் புதல்வர்  எம்.எம். அஹமத் சிபாக் அப்றினுக்கு பிரதேச செயலாளர்  தலைமயிலான குழுவினர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் நினைவு சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி  கெளரவிக்கப்பட்டார் .  



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe