Ads Area

சம்மாந்துறை பிரதேச மக்களுக்காக உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்திட்டம்.

 சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

எமது குடும்பத்தினதும் நாட்டினதும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அம்பாறை மாவட்டஅரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களின் கீழ் சம்மாந்துறைபிரதேசத்திலுள்ள ஒவ்வொரு வீடுகளிலும் வயல் மற்றும் மேட்டுக் காணிகளிலும் வீட்டுத் தோட்டச் செய்கை, உப உணவு உற்பத்திகளை மேற்கொள்ளல் போன்ற வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா அவர்களின்தலைமையில் சம்மாந்துறை பிரதேச  செயலகத்தில் நேற்று(27) நடை பெற்றது.

பிரதேச செயலக முற்றத்தில் பிரதேச செயலாளர் அவர்களினால் உப உணவு நாற்றுக்கள் நட்டுவைக்கப்பட்டது .

இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர், ஏ.எம்.எம் நௌஷாட்  ,உதவித்திட்டமிடல் பணிப்பாளர்ஏ.எல்.ஏ மஜீட் , சம்மாந்துறை பொலிஸ் நிலைய  உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன்,கிராம நிலதாரிநிருவாக உத்தியோகத்தர் , விவசாய போதனாசிரியர்கள் , சமூகசேவை உத்தியோகத்தர் ,,சமுர்த்திகருத்திட்ட முகாமையாளர் ,சமுர்த்தி  முகாமையாளர்கள் ,விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராமசேவக உத்தியோகத்தர் ,முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் மகளிர் அபிவிருத்திஉத்தியோகத்தர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் என பலர் கலந்து கொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe