இலங்கை எதிர்நோக்கும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடனான மற்றுமொரு சுற்று கலந்துரையாடல் இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி விக்கிரமசிங்க ஜூம் தொழில்நுட்பத்தின் ஊடாக சந்திப்பில் இணைந்ததுடன் இரு தரப்பினரும் சாதகமான முறையில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
மின் கட்டண திருத்தம், கலால் சட்டம் போன்ற கூடுதல் தகவல்களுக்கு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுத்துள்ளது மற்றும் கோரப்பட்ட தகவல்களை வரும் திங்கட்கிழமைக்குள் வழங்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி மற்றும் சட்ட ஆலோசகர்கள் இன்றைய கூட்டத்தில் இணைந்ததுடன், அடுத்த புதன்கிழமை (31) மற்றுமொரு சுற்று கலந்துரையாடலுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூயர், பிரதித் தலைவர் மசாஹிரோ நோசாக்கி, டுபாகஸ் பெரிதானுசெட்யவான், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
thank-NewsWireLK