இன்று முதல் அமுலாகும் வகையில் பல்வேறு பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதித்து சிறப்பு வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
இதன்படி சொக்கொலட் உள்ளாடைகள் ஆடைகள் இலத்திரனியல் பொருட்கள் மற்றும் பொதியிடப்பட்ட பால் உட்பட்ட சுமார் 300 பொருட்களுக்கு தற்காலிக இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.