Ads Area

கல்வி முறைமையில் சீர்த்திருத்தங்கள் பற்றி கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர்!

 


வருடக்கணக்கில் பாட அறிவை மனப்பாடம் செய்து பரீட்சைக்கு முகம் கொடுக்க வேண்டிய மன அழுத்தத்தில் இருந்து பிள்ளைகளை விடுவிப்பதற்காக கடுமையாக உழைத்து வருவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி சீர்திருத்தங்களுக்கு அப்பாற்பட்ட கல்வி மாற்றத்தின் ஊடாக தற்போதுள்ள பரீட்சை மையக் கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என அமைச்சர் குறிப்பிடுகின்றார். 

வருடாந்த தேசிய கணிதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்பள்ளியில் இருந்து பாடசாலை வகுப்பறை ஊடாக இந்த மாற்றமான மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் முன்பள்ளியில் சுற்றுச்சூழலை ஆர்வமுடன் அவதானிக்க அதிக இடவசதி உள்ளதால் அதிகளவான குழந்தைகள் கேள்விகள் கேட்டு ஆய்வு ரீதியான சுயாதீனமான கல்வியில் ஈடுபட வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இவ்வாறான ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியில் ஈடுபடுவதன் மூலம் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய அறிவை இணைத்து சமூகத்திற்கு பயனுள்ள படைப்புகளை உருவாக்க முடியும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

thanks-(யாழ் நியூஸ்)

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe