Ads Area

கடவுச்சீட்டு விநியோகம் மீண்டும் ஆரம்பம்.

 குடியகல்வு குடிவரவு திணைக்களத்தின் கணனிக்கட்டமைப்பு வழமை நிலைமைக்கு திரும்பிய நிலையில் இன்று (09) காலை முதல் கடவுச்சீட்டு வழமைப் போன்று விநியோகிக்கப்படுவதாக குடியகல்வு குடிவரவு திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் பிரதி குடிவரவு கட்டுப்பாட்டாளர் திருமதி பியூமி பண்டார தெரிவித்துள்ளார்.


நேற்று (08) வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கீடு செய்த விண்ணப்பதாரர்களுக்கு இன்று (09) கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என்று ஊடக பேச்சாளர் பிரதி குடிவரவு கட்டுப்பாட்டாளர் திருமதி பியூமி பண்டார மேலும் தெரிவித்தார்



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe