Ads Area

கடவுச்சீட்டு வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தம்.

 கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. பத்தரமுல்லையில் உள்ள அதன் பிரதான அலுவலகம் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் இன்று (08) தெரிவித்துள்ளது.


கடவுச்சீட்டு வழங்குவது தொடர்பான அதன் கணினி கட்டஅமைப்பில் ஏற்பட்ட கோளாறே இதற்கு காரணம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் மறு அறிவித்தல் வரை கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe