சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அண்மையில் நொத்தாரிசு திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமையினால் எதிர்காலத்தில் சம்மாந்துறை பிரதேசத்தில் அதனை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பாக பிரதேச சபை தவிசாளர் எ.எம்.முஹம்மட் நௌஷாட் மற்றும் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா ஆகியோர்களுடனான கலந்துரையாடல் பிரதேச சபை பிரதான கேட்போர் கூடத்தில் நேற்று (02) இடம்பெற்றது.
இதில் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி அன்வர் சியாத், சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொருளாளர் சட்டத்தரணி நஸீல், சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் உதவித் தலைவர் சட்டத்தரணி சலீம் உள்ளிட்ட சட்டத்தரணிகள் கலந்துகொண்டனர்.
தகவல் மையம்
சம்மாந்துறை பிரதேச சபை
0672030800
𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 👇🏻👇🏻
https://chat.whatsapp.com/HHYNOd0BLR4EFPHy5dA5FT