Ads Area

சாய்ந்தமருதில் சிரேஷ்ட பிரஜைகளுக்கு இலவச மூக்குக் கண்ணாடி விநியோகம்.

 நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்க சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபரின் நெறிப்படுத்தலில்  சமுர்த்தி தலைமை பீட  முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலத்திற்குட்பட்ட சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களிலுள்ள சிரேஷ்ட பிரஜைகளுக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கல் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக  கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் கலந்து கொண்டதுடன்
அதிதிகளாக வைத்தியர் எம்.வை.எம்.அலி ஜின்னா, உதவி  பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா,  உதவி திட்டமிடல் பணிப்பாளர்  கே.எல்.ஏ.ஹமீட், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நளீர், சமுர்த்தி மகா சங்க உதவி முகாமையாளர் கலாநிதி றியாத் ஏ மஜித், சமுர்த்தி பிரிவு பிரதம கணக்காய்வாளர் இஸட்.ஏ.ரகுமான்
ஓய்வு பெற்ற துறைமுக அதிகார சபை உத்தியோகத்தர் கே.எம்.அஸ்ரப் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது 52 சிரேஷ்ட பிரஜைகளுக்கு மூக்குக் கண்ணாடி வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வுக்கு பூரண அனுசரனையை வைத்தியர் எம்.வை.எம்.அலி ஜின்னா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Photo Albums

1 / 5
2 / 5
3 / 5
4 / 5
5 / 5

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe