Ads Area

சாய்ந்தமருது பிரதேச செயலகத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு.

 நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கடமையாற்றி  ஓய்வு பெற்றுச்செல்லும் திட்டமிடல் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.எம். சமீம், சமுர்த்தி  கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.ஏ.கபூர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எம்.றசீத் ,எம்.வை.றசீத், ஏ.ஏ.கபூர் மற்றும் அலுவலக வாகன சாரதி எம்.எம்.முகம்மது தம்பி ஆகிய 06 பேருக்குமான பிரியாவிடை நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக நலன்புரிச் சங்க செயலாளர் எம்.எஸ்.எம்.றியாஸின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (30) வெள்ளிக்கிழமை  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உதவி  பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, கணக்காளர்  ஏ.ஜே.நுஸ்ரத் பானு, உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், நிர்வாக  உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நளீர், சமுர்த்தி தலைமை பீட  முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம் ,சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யூ. ஜூனைதா, பிரதம  முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.சமூன்,  பிரதம  முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (நிர்வாகம்) எம்.ஏ.சி.சீனத்தும்மா, சமுர்த்தி வங்கிச் சங்க உதவி முகாமையாளர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், பிரிவுக்கான பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும்  கலந்து கொண்டனர்.

இதன்போது  உத்தியோகத்தர்கள் அலுவலகம் மற்றும் பொதுமக்களுக்கு ஆற்றிய பணிகள், காரியாலய கடமைகளில் அவர்களின் முன் மாதிரியான செயற்பாடுகள் குறித்து பல உத்தியோகத்தராலும் பாராட்டிப் பேசப்பட்டதுடன்  குறித்த ஓய்வு பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகத்தர்கள் நலன்புரிச் சங்கத்தினால் அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டன.



Photo Albums

1 / 5
2 / 5
3 / 5
4 / 5
5 / 5

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe