சம்மாந்துறை '89 born அமைப்பினால் ஏட்பாடு செய்யப்பட்ட T-Shirt வெளியீடு மற்றும் புதிதாக ஒதுக்கப்பட்ட (ஆலயடி வட்டை) பொது மைதானத்தின் எல்லைகளைச் சுற்றி மரம் நடுதல் நிகழ்வு கடந்த 2022.12.31ம் திகதி சனிக்கிழமை அமைப்பின் தலைவர் MYM. அனீஸ் அவர்களின் தலைமையில், அமைப்பின் முன்னாள் ஸ்தாபக தலைவர் Dr.NM. ஹாலிப் மற்றும் செயலாளர் A. இர்ஷாத் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் அமைப்பின் நிருவாக உறுப்பினர்களால் நடாத்தப்பட்டது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் AMM. நௌஷாட் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் விசேட அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் SLM. ஹனிபா அவர்களும் சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயம் சார்பாக Eng. MSM. நவாஸ் அவர்களும், இஸ்லாமிய செயலகம் சார்பாக பிரதம நம்பிக்கையாளர் மௌலவி KMKA. ரம்சீன் காரியப்பர் அவர்களும் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் சம்மாந்துறை கிரிக்கெட் அசோஸியேசனின் உறுப்பினர்களும், மற்றும் சம்மாந்துறை நலன் விரும்பிகள் சிலரும் கலந்து சிறப்பித்தனர்.
அமைப்பின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறுப்பினர்களின் பங்களிப்பு மூலம் மேட்கொள்ளப்பட்ட இந்நிகழ்விட்கு 50 நேரடி அங்கத்தவர்கள் பங்குபற்றி இருந்ததுடன் இந்நிகழ்வில் அங்கத்தவர்களுக்கான T-Shirt உம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
சம்மாந்துறை '89 born அமைப்பினால் ஏட்பாடு செய்யப்பட்டிருந்த இம்மரநடுகையில் பாதுகாப்பு கூடுகளுடன் கூடிய 50 மரக்கன்றுகள் தயார்படுத்தப் பட்டிருந்தும் முதற்கட்டமாக 20 மரக்கன்றுகள் குறிப்பிட்ட தினத்தன்று நடப்பட்டது என்பதும் மேலும் இந்நிகழ்வில் அமைப்பின் கடந்தகால நிருவாக உறுப்பினர்களுக்கு சேவைப் பாராட்டு விருது வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.