Ads Area

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் 40 தொழிற்சங்கங்கள்.

 அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக இன்று(09) முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.


இன்றைய(09) தொழிற்சங்க நடவடிக்கையில் மருத்துவம், துறைமுகம், மின்சாரம், நீர் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட 40 தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.


இதேவேளை, சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றிய உறுப்பினர்கள் நேற்று(08) காலை 6.30 இற்கு ஆரம்பித்த ஒரு நாள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு இன்று(09) காலை 06.30 உடன் நிறைவுக்கு வந்தது.


சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இரத்து செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe