Ads Area

சாய்ந்தமருதுவில் மீட்கப்பட்டது வெடிபொருள்? Explosive

  - பாறுக் ஷிஹான் -

சாய்ந்தமருது கடற்கரை பகுதியில் மண்ணில் புதையுண்ட நிலையில்   மீட்கப்பட்ட மிதிவெடி வெடிபொருள் என கூறப்பட்ட போதிலும், அதை தற்போது விசேட அதிரடிப்படையினர் பரிசோதனை செய்து மிதிவெடி அல்ல எனவும் கேஸ் உள்ள பொருள் என உறுதிப்படுத்தியுள்ளனர். 

குறித்த பொருள் இனங்காணப்பட்ட நிலையில் அது தொடர்பாக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது  பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   இன்று  காலை கடற்கரைப்பகுதில் இனங்காணப்பட்ட குறித்த பொருள் பழையதா அல்லது வேறு இடம் ஒன்றில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளதா என்ற விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த மிதிவெடி மீட்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe