நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தின் பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலையின் கூட்ட மண்டபத்தில் இப்தார் நிகழ்வு ஒன்று அமைப்பின் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம்.றியாஸின் நெறிப்படுத்தலில் அமைப்பின் தலைவர் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.சைபுடீன் தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலையை இன்னும் வெளிச்சத்துக்கு கொண்டுவரும்; அமைப்பின் செயத்திட்டதின் கீழ் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் இந்த சந்தர்ப்பத்தில் PAST PUPILS’ ASSOCIATION னின் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய மாணவர்களான தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், சாய்ந்தமருதின் முன்னாள் பிரதேச செயலாளரும் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஏ.எல்.எம்.சலீம் மற்றும் சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸ் குழுமத்தின் உரிமையாளர் எம்.எஸ்.எம்.முபாறக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வின்போது பாடசாலையை இன்னும் முன் கொண்டுவருவதற்கான பல்வேறு முன்மொழிவுகளை உபவேந்தர் றமீஸ் மற்றும் முபாறக் ஆகியோரால் முன்வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய அதிபர் எம்.எஸ். நபார், சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ், சாய்ந்தமருது முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி எம்.எம். இஸ்மாயில், ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். ரஸாக், கல்முனை வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.