Ads Area

பெற்றோல் தட்டுப்பாடு : மக்கள் மீண்டும் வரிசையில்



 பாறுக் ஷிஹான்


மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு என்ற தகவல்- அம்பாறையில் மீண்டும் நெருக்கடியான எரிபொருள் நிலையங்கள்


மீண்டும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.


அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை உள்ளிட்ட பகுதிகளில்  செவ்வாய்க்கிழமை (30) இரவு முதல் பெற்றோல் எரிபொருளை மக்கள் பெறுவதற்கு எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தந்ததைக் காண முடிந்தது.


 கடந்த காலங்களில் கியூ.ஆர் முறைமையினால் சீராக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகம் திடீரென இவ்வாறு நெருக்கடிக்குள்ளானமை மக்கள் மத்தியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதனால் மக்கள் கடந்த காலங்களில் எரிபொருள் நிலையத்தை சூழ ஒன்றுகூடியவாறு நிற்பதையும் அதிகளவான வாகனங்கள் எரிபொருள் நிலையங்களை நாடிச் செல்வதையும் காண முடிகின்றது.


மேலும், நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe