உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை சமர்ப்பித்த அரச துறை ஊழியர்களை மீள பணிக்கு இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வாராந்த அமைச்சரவை முடிவுகளின் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு சமர்ப்பித்துள்ள அரச ஊழியர்கள் தொடர்பாக தேர்தல் நடத்தப்படும் வரைக்கும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி தேர்தல்கள் ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அவதானிப்புக்களை கருத்திற் கொண்டு, அவ்வாறன அரச உத்தியோகத்தர்கள் தாம் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிடவுள்ள தேர்தல் வட்டாரத்தில் அமைந்துள்ள அரச/பகுதி அரச நிறுவனத்தில் கடமையில் ஈடுபட்டிருப்பின், அவர்கள் மீண்டும் கடமைக்கு சமூகமளிப்பதற்கு இயலுமாகும் வகையில் குறித்த தேர்தல் வட்டாரத்திற்கு வெளியே இடமாற்றம் செய்து கடமையில் ஈடுபடுவதற்காக அரச பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகரம் வழங்கியுள்ளது.