Ads Area

சம்மாந்துறை மஜ்லிஸ் ஷுறா சபையின் அழைப்பில் விஷேட சந்திப்பில் ஈடுபட்ட பா.உ. அதாவுல்லா.

சம்மாந்துறை மக்களின் பொதுவான தேவை மற்றும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இன்று ,மஜ்லிஸ் ஷுறா கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் மக்களுடனான கலந்துரையாடலில் அப் பிரதேச மக்களின் தேவைகள் சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.


மேலும் அண்மை நாட்களில் பேசுபொருளாக உள்ள ஆசிரியர்கள் இடமாற்றம் சம்பந்தமாக ஒரு தீர்கமான முடிவை எட்டுவதற்காக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.


இதில் , கடந்த வாரம் ஆசிரியர் இடமாற்றம் சம்பந்தமாகவும் ,  குறிப்பாக பெண் ஆசிரியைகளின் பொருத்தமற்ற இடமாற்றம் சம்பந்தமாகவும் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக , ஜனாதிபதியின் செயலாளருடன் அன்மையில் பேசிய விடயங்கள் சம்பந்தமாக தெரிவிக்கப்பட்டதுடன் , இவ் இடமாற்றம் குறித்து  அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் காத்திரமான முடிவுகளை பெற்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நம்பிக்கையூட்டும் முடிவை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய காங்கிரஸின் தலைவரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின்  இணைத் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்!





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe