பத்தரமுல்லை விக்கிரமசிங்க புர சந்தியில் லொறியொன்று மோதியதில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உதவி விரிவுரையாளர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மரணமடைந்த லக்மினி போகமுவ (24) கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் உதவி விரிவுரையாளரும் விக்கிரமசிங்க புரத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர்.
நேற்றுக் காலை கடமைக்குச் செல்வதற்காக பல்கலைக்கழகத்துக்குச் சென்று கொண்டிருந்த போதே அவர் விபத்துக்குள்ளானார். காயமடைந்தவர் உடனடியாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.