Ads Area

தென்கிழக்கு, களனி பல்கலைக்கழகங்களிடையே அறிவுசார் பரிமாற்ற நிகழ்வு.

 (எம்.என்.எம்.அப்ராஸ்)


பல்கலைக்கழக அறிவுசார் வளங்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் களனி பல்கலைக்கழக புவியல்துறை மாணவர்களுக்கு ட்ரோன் கெமரா (Drone Camera) பயன்பாடு மற்றும்  தொழிநுட்பம் தொடர்பான செயலமர்வு தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசாரபீடத்தின் புவியல்துறை திணைக்களத்தின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே.நிஜாமிர் தலைமையில் சிரேஷ்ட பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல் அவர்களின் ஒருங்கிணைப்பில் இன்று (14)இடம்பெற்றது.


தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் அவர்களது வழிகாட்டலில் இடம்பெற்ற குறித்த செயலமர்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டார்.


மேலும், இந்நிகழ்வின் போது களனி பல்கலைக்கழக சமூக விஞ்ஞானபீடத்தின் புவியல்துறைத்தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் லால் மர்வின் தர்மசிறி, பேராசிரியர் ஏ.ஜி.அமரசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள், தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எல்.பௌசுல் அமீர், கலாநிதி றபீகா அமீர்டீன், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச்.முகம்மட்றினோஸ், விரிவுரையாளர் ஐ.எல்.முகம்மட் சாஹிர், விரிவுரையாளர் ஏ.எல்.ஐயூப், விரிவுரையாளர் எம்.என்.நுஸ்கா பானு, விரிவுரையாளர் எம்.எச். எப்.நுஸ்கியா உள்ளிட்டவர்களும் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.ரீ. அகமட் அஷ்ஹர், கல்விசாரா உத்தியோகத்தர்களும் பங்கு கொண்டிருந்தனர்.


ட்ரோன் கேமர (Drone Camera) பயன்பாடு மற்றும்  தொழிநுட்பம் தொடர்பான செயலமர்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக புவியல்துறை திணைக்களத்தின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே.நிஜாமிர் உள்ளிட்ட விரிவுரையாளர்கள் களனி பல்கலைக்கழக புவியல்துறை மாணவர்களுக்கு விரிவான செயல்முறை பயிற்சிகளையும் விரிவுரைகளையும் ஆற்றினர்.


களனி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் வருகையை மகிழ்விக்க தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், நிகழ்வின் போது நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டு, பொன்னாடைகளும் போர்த்தப்பட்டன.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe