Ads Area

சம்மாந்துறை வளத்தாப்பிட்டி வில்லுக் குளப் பகுதிகளை ஊடறுத்து திடீரென வந்த யானைக் கூட்டம்.

 பாறுக் ஷிஹான்.


யானைக்கூட்டமொன்று வேளாண்மை அறுவடையின் பின்னர் புதிதாக முளைக்கின்ற புல்லினங்களை உண்பதற்காக நாடி வருகின்றன.


அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி வில்லுக்குளப்    பகுதிகளை ஊடறுத்து இன்று காலை திடீரென யானைகள் இவ்வாறு வருகை தந்துள்ளன.


இதன் போது, குறித்த யானைகள் அங்குள்ள புதிய புல்லினங்களை உண்ணுவதுடன், கூட்டத்திலுள்ள யானைக்குட்டிகள் விளையாடுவதையும் காண முடிந்தது.


இன்று சுமார் பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் என 100 க்கும் அதிகமான யானைகள் அப்பகுதியிலுள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி   வருகை தந்திருந்தன.


தினமும் அப்பகுதிக்கு வரும்  யானைக்கூட்டத்தை மக்கள் பார்வையிட்டு வருவதுடன், இவ்வாறு வயல்வெளிகளை நோக்கி வருகை தந்துள்ள யானைகள் ஊருக்குள் பிரவேசிக்க முடியாத வகையில் பார்வையாளர்களாக உள்ள மக்கள் சத்தங்களை எழுப்பிய வண்ணமுள்ளனர்.


மேலும், இப்பிரதேசத்தில் அண்மையில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தீ வைக்கப்படுவதனாலும் அங்கு  கொட்டப்படும்  குப்பைகளை தினந்தோறும் 30 க்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு வருகை தருவதுடன், அருகிலுள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe