Ads Area

விபத்தில் சிக்கி நடக்க முடியாதிருந்தவருக்கு 3 வருடங்கள் சிகிச்சையளித்து அவரை குடும்பத்தாரோடு சேர்த்து வைத்த துபாய் காவல்துறை.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.


ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விபத்தில் சிக்கி நிரந்தரமாக ஊனமுற்றிருந்த ஒருவருக்கு 3 வருடங்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து அவரை அவரது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று துபாயில் நிகழ்ந்துள்ளது.


57 வயதான ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் சாலை விபத்தொன்றில் சிக்கி முழுமையாக ஊனமடைந்த நிலையில் அவரை பொறுப்பெடுக்க யாரும் முன்வராததன் காரணமாக துபாய் காவல்துறையினரே அவருக்கு தொடர்ந்து 3 வருடங்கள் சிகிச்சையளித்து கவனித்து வந்துள்ளனர்.


சிகிச்சைக்குப் பின்னர் அவர் தற்போது தனது சொந்த நாட்டுக்குச் சென்று குடும்பத்தாரோடு சேர விருப்பம் தெரிவித்ததனால் துபாய் காவல்துறை அவருக்கான பயண ஏற்பாடுகளை செய்து அவரை விமானநிலையம் வரை அழைத்து வந்து வழியனுப்பியும் வைத்து நெகிழச் செய்துள்ளனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe