அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சிறுவர் சித்திரப்போட்டி- 2023 இல் சம்மாந்துறை ஸ்ரீ கோரைக்கர் வித்தியாலய மாணவன் மாகாண மட்டத்தில் 3வது இடம் பெற்று சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கமு/சது/ ஸ்ரீ கோரைக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தில் இருந்து மாகாண மட்டத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்ற சாதனை மாணவன் ரீ. தினுக்சனுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு ந. மகேந்திரக்குமார் தலைமையில் அண்மையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எச். நைறூஸ்கான் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான ஜனாப் ஏ. நசீர், திரு பி. பரமதயாளன், சித்திர பாட வளவாளர் எஸ்.எல். அப்துல் முனாப், பாடசாலையின் அதிபர் திரு எஸ். இளங்கோ சித்திரம் பாட ஆசிரியை செல்வி. என். லிசாந்தனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.