Ads Area

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற குற்றச்சாட்டில் பெண் கைது!

முல்லைதீவு - விஸ்வமடு இளங்கோபுரம் பகுதியில் தகாத உறவினால் பிறந்த குழந்தையை கொன்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


கணவரைப் பிரிந்து வாழும்   இந்த பெண்  ஒருவருடன் தகாத   உறவு வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர் . 


மூன்று நாட்களுக்கு முன்னர் குழந்தையைப் பெற்றெடுத்து அதனைக் கொன்றதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து இவர் கைது செய்யப்பட்டார் . 


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe