Ads Area

மாற்றுத்திறனாளிகளிகளுக்கு அணுகுவழிப்பாதைகளை அமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் ஆய்வு.

 பாறுக் ஷிஹான்.


இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாப்பதற்காக பல்வேறு செயற்றிட்டங்களைச்செய்த வருகிறது. 


1996ம் ஆண்டின் 28ம் இலக்க அங்கவீனமுற்ற ஆட்களின் உரிமைகள் பாதுகாப்புச்சட்டத்தில் அங்கவீனமுற்றவர்களின் நலனை மேம்படுத்துவதற்கும் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான செயற்றிட்டங்களை ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்கும் வழி வகுத்துக் கொடுத்துள்ளது.


இப்படியான சட்டங்கள் மூலம் விசேட தேவையுள்ளவர்கள் என்பவர்கள் யாருக்கும் கீழ்பட்டவரல்லர் என்பதையும் அவர்கள் தங்களைத் தாங்களே கீழ்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற வகையிலும் பல ஏற்பாடுகளைச்செய்துள்ளது. 


இந்த வகையில் மாற்றுத்திறனாளிகளின் அணுகுவழிப் பாதை மற்றும் ஏனைய விடயங்களைக் கண்காணித்து அது பற்றிய சிபாரிசுகளை முன்வைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை ஆணைக்குழு எடுக்கவுள்ளது. 


இதற்கமைய District Accessibility Audit Team ஒன்று ஆணைக்குழுவினால் அமைக்கப்பட்டுள்ளது. 


நேற்று (27) கல்முனை வலயக்கல்வி அலுவலகம், மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் ஆகிய அரச அலுவலகங்களுக்குச்சென்று குழுவினர் பரிசீலனை செய்துள்ளனர். எதிர்காலத்தில் மாற்றுத் திறனாளிகளிகளுக்கான அணுகுவழிப்பாதை மற்றும் ஏனைய விடங்கள் சம்பந்தமாக சிபாரிசுகளை முன் வைப்பதற்க ஆணைக்குழு முயற்சிகள் செய்து வருகிறது. 


விசேட தேவையுள்ளவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கிடைக்கும் வழி குறைவாக இருந்தாலும் இவர்கள் சக்கர நாற்காலியில் இருந்தவாறே திணைக்களத்தின் தலைவரை அல்லது அவர் கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய ஒருவரை சந்திப்பதற்கு இலகுவாக செல்லக்கூடிய வகையில் கட்டிட அமைப்புக்கள் நிர்ணயிக்கப்பட வேண்டுமென்ற சட்டங்கள் விசேட சுற்றறிக்கைகள் வந்துள்ளன.


இவர்களை விசேடமாக கவனிக்கும் நோக்கமானது அவர்களின் உரிமைகளைப்பாதுகாப்பதுடன் சமூகத்தில் கௌரவமான வாழ்க்கை வாழ்வதை உறுதிப்படுத்துவது அனைவர்கள் மீதும் கடமையாகும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe