Ads Area

சமூக வலைதளங்களில் அவுருது பாடலை திரிபுபடுத்திய 31 வயது நபர் கைது.

சித்திரை புத்தாண்டு பாடலை திரிபுபடுத்தி பாடிய கலால் திணைக்கள அதிகாரி கைது


சித்திரை புத்தாண்டை குறிக்கும்  சிங்களவர்களின் ரோஹன பெத்தகே பாடிய  “சூரிய மாங்கல்ய” என்ற பாடலை திரிபுபடுத்தி பாடி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.


குறித்த பாடல் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.


இந்நிலையில், கலால் திணைக்கள அதிகாரி நேற்று செவ்வாய்க்கிழமை (16) வடமேல் மாகாண பிரிவின் வாரியபொல அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதோடு, இன்று (17) குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe