Ads Area

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr அஸாத் எம் ஹனீபாவிற்கு உயர் பதவி.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றிய நிலையில், வைத்திய நிர்வாக சேவை பதவியுயர்வு மற்றும் இடமாற்ற கட்டளையின் பிரகாரம் டொக்டர் அஸாத் எம் ஹனிபா அவர்கள் சிரேஷ்ட தரத்துக்கு உள்ளீர்க்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதற்கமைவாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான டொக்டர் அஸாத் எம் ஹனீபா இன்று (02) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களிடமிருந்து விடுவிப்பு கடிதத்தினை பெற்றுக்கொண்டார்.


டொக்டர் அஸாத் எம் ஹனிபா சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி, தரமுயர்த்தல் மற்றும் அதன் வளர்ச்சிப்பாதைக்கு ஆற்றிய அளப்பெரும் சேவைகளை நினைவுகூர்ந்து பாராட்டி பேசிய பிராந்திய பணிப்பாளர் மற்றும் பிரிவுத்தலைவர்கள் தமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.


வைத்திய அத்தியட்சகர் டொக்டர் அஸாத் எம் ஹனிபா அவர்கள் அதிக தேசிய விருதுகளைப் பெற்று கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பெயரை புகழ்பூக்கச் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe