Ads Area

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உறக்கத்திலிருந்த பெண்ணைத்தாக்கி நகை கொள்ளையிட்ட முகமூடி நபர்.

பாறுக் ஷிஹான்.


முகமூடி அணிந்த நபரொருவர் பெண்ணொருவரைத் தாக்கி விட்டு நகைகளைக் கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.


அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வீட்டில் அதிகாலை வேளை 3 மணியளவில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணைத் தாக்கி விட்டு முகமூடி அணிந்த நபரொருவர் நகைகளைக் கொள்ளையடித்து சென்றதாக   சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.


குறித்த முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத்தின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினரின் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.


இதன் போது கல்முனை பிரதேச நகைக்கடையொன்றில் இன்று திங்கட்கிழமை (12) திருடப்பட்ட நகை மீட்கப்பட்டுள்ளதுடன், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரும் சம்மாந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.




இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  37 வயதுடை சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe