Ads Area

சம்மாந்துறையில் சமையல் எரிவாயு சிலிண்டரை திருடிய இளைஞன் கைது.

 பாறுக் ஷிஹான்.


வீடொன்றிலிருந்து சூட்சுமமான முறையில் சமையல் எரிவாயு சிலிண்டரை திருடிச்சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஸ் ஸாலிஹாத் மகளிர் அறபுக்கல்லூரி பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது.


இதன் போது குறித்த சமையல் எரிவாயு சிலிண்டரை திருடியதாக சந்தேகத்தில் 21 வயதுடைய சந்தேக நபரை 24 மணித்தியாலத்தில் பொதுமக்களின் உதவியுடன்    சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


அத்துடன், இத்திருட்டுச்சம்பவத்தில் கைதான சம்மாந்துறை  செந்நெல் கிராமத்தைச்சேர்ந்த 21 வயது சந்தேக நபரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe