Ads Area

புனித ஜோன் அம்பியுலன்ஸ் முதலுதவி சிகிச்சை தொடர்பான அடிப்படைக் கற்கை, பயிற்சி நெறிகள் சம்மாந்துறையில்!

 சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.

 

அல் உஸ்வா இஸ்லாமிக் அமைப்பின் தலைவரும் அல் உஸ்வா மகளிர் அரபுக் கல்லூரியின் செயலாளர் ஐ.எல்.எம். முஸ்தபா மௌலவியின் தலைமையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை கூட்ட மண்டபத்தில் நேற்று (22) சனிக்கிழமை நடைபெற்றது.


புனித ஜோன் அம்பியுலன்ஸ் முதலுதவி சிகிச்சை தொடர்பான அடிப்படைக் கற்கை, பயிற்சி நெறியினை புனித ஜோன் அம்பியுலன்ஸ் படைப் பிரிவின் அம்பாறை மாவட்ட ஆணையாளரும் தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணியின் 17 ஆவது படைப் பிரிவின் பயிற்சி அதிகாரி கெப்டன் எம்.டி. நௌஷாட் வபி தலைமையில் சுமார் 30 தொடக்கம் 40 வரையான தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மூன்றாவது நாள் பயிற்சியில், முதலுதவி மூலம் பாதிக்கப்பட்ட ஒருவரை காப்பாற்றுவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.


 மேலும், எழும்பு முறிவு, தீ விபத்தின் போது, மின்சாரம் தாக்கிய போது, சி பி ஆர் முறை, வலிப்பு ஏற்படும் போது, மூச்சு தினறலின் போது, மாரடைப்பு ஏற்பட்டு போது, நீரில் தாண்ட போது, துப்பாக்கி சூடு ஏற்படும் போது, கத்திக் குத்து ஏற்படும் போது போன்ற பல சந்தர்ப்பங்களில் எவ்வாறு முதலுதவி மற்றும் சிகிச்சை வழங்குவது தொடர்பாக கற்கை நெறியுடன் கூடிய பயிற்சியும், அவசர சூழ்நிலைகளில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் பற்றிய பயிற்சிகளும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதன் போது, அல் உஸ்வா இஸ்லாமிக் அமைப்பின் தலைவரும் அல் உஸ்வா மகளிர் அரபுக் கல்லூரியின் செயலாளர் ஐ.எல்.எம். முஸ்தபா மௌலவி அவர்களினால் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக காலை, மாலை சிற்றுண்டி மற்றும் பகல் உணவு போன்றவை வந்தவர்களுக்கு இப்பயிற்சியில் ஈடுபடும் அனைவரும் தமது கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்நிகழ்விற்கு, புனித ஜோன் அம்பியுலன்ஸ் படைப் பிரிவின் சம்மாந்துறை, இறக்காமம் பிரதேச அத்தியட்சகர் ஏ.ஆர்.எம். ஹூசையின், புனித ஜோன் அம்பியுலன்ஸ் படைப் பிரிவின் கல்முனை, நாவிதன்வெளி, சாய்ந்தமருது பிரதேச அத்தியட்சகர் எஸ்.ஏ.எம். அஸ்லம் என பலரும் கலந்து கொண்டனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe