Ads Area

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் இடம் பெற்ற திருநீற்றுப் புதன் திருச் சடங்கு திருப்பலி.

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் இடம் பெற்ற திருநீற்றுப் புதன்  திருச் சடங்கு திருப்பலி , பங்குத்தந்தை  ஜீனோ சுலக்சன் அடிகளாரின் தலைமையிலும் இடம் பெற்றது.  


இன்று புதன் கிழமை (05.03.2025) இறை யேசுவின் பாடு, மரணம் மற்றும் அவரின் உயிர்ப்பை சிந்தித்து நாற்பது நாட்கள் செபம், தவம், தானம் போன்ற செயல்களில் கத்தோலிக்க மக்கள் நிலைக்கவும், அருளின் காலம், இரக்கத்தின் காலம், மன்னிப்பின் காலம், கடவுள் எம்மை தேடி நம்மை மீட்கும் காலத்தை சிந்தித்து மனம் மாற்றம் கொள்ளும் காலத்தை தொடக்கமாக மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மீண்டும் மண்ணுக்கு திரும்புவாய்'' என்று விசுவாசிகளின் நெற்றியில் சாம்பல் பூசி மனமாற்றம் அடைய கத்தோலிக்க திருச்சபை எம் ஒவ்வொருவருவரையும் அழைத்து நிற்கின்றது.


இந் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து சிறப்பித்து, வழிபாடுகளில் ஈடுபட்டனர்.


செய்தியாளர்

க.டினேஸ்












Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe