சம்மாந்துறை அன்சார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள புனிதப் பல்லக்கை வழிபடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பௌத்த பக்தர்கள் குழுவொன்றுக்கு முஸ்லிம் பள்ளிவாசலுக்குள் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளமை இலங்கையில் சிறந்த மத நல்லியணக்க செயலாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்பில் வெளிவந்துள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வருடாந்த “சிறி தலதா வந்தனாவ” நிகழ்விற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டி நகரத்தில் ஒன்று கூடும் நிலையில், கண்டி நகரம் கடுமையாக நிரம்பி வழிகிறது. இதனால் வழிபாடுகளில் ஈடுபட வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சில பக்தர்கள் தங்குவதற்கு இடமின்றி வரிசையில் இரவைக் கழித்தனர். இதனை அறிந்த அப்பகுதி முஸ்லிம்கள் பௌத்த பக்தர்களை பள்ளிவாசலுக்குல் தங்க அனுமதித்து ஏற்பாடுகளை செய்துள்ளனர்.