Ads Area

“தொலைபேசி சின்னம்” காலாவதியானது எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆதரவளிக்கக் கூடாது - ரவூப் ஹக்கீம்

“தொலைபேசி சின்னம்” காலாவதியானது எனவும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆதரவளிக்கக் கூடாது எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


"தொலைபேசி சின்னம் இறந்து நீண்ட நாட்களாகிவிட்டது; அதற்காக நாங்கள் வாக்குகளைக் கோரமாட்டோம்" என்று ஹக்கீம் தனது உரையில் தெரிவித்தார்.


சமகி ஜன பலவேகய (SJB) உடனான SLMC யின் உறவு குறித்தும் ஹக்கீம் உரையாற்றினார். இரு தரப்பினருக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்பு குறித்து தீவிர பரிசீலனை தேவை என அவர் சுட்டிக்காட்டினார்.


"இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறோம். கண்டியில் கூட 11 சபைகளில் தனித்துப் போட்டியிடுகிறோம். முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் SJBயின் கீழ் 3 ஆசனங்களில் மட்டுமே தங்கள் விருப்பப்படியும் SJB அமைப்பாளர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் போட்டியிடுகின்றனர்" என்று ஹக்கீம் விளக்கினார்.


செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe