பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களாக வெற்றியீட்டியவர்களுடனான சந்திப்பொன்று கட்சியின் தேசியத்தலைவர் றிஷாட் பதியுதீன் பங்குபற்றுதலுடன் நேற்று (13) சம்மாந்துறையில் இடம்பெற்றிருந்தது.
இதன் போது கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர், பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மது, கட்சியின் தவிசாளர் அமீர் அலி, கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் அப்துல் றஷாக் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களென பலரும் கலந்து கொண்டனர்.