நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில், தேசிய காங்கிரஸ் கட்சிக்கு சம்மாந்துறை பிரதேச சபையில் கிடைத்த பட்டியல் உறுப்புரிமையை சுழற்சி முறையில் பகிர்ந்தளிக்க அனைத்து வேட்பாளர்களும் அக் கட்சியின் தலைவருடன் ஒருமித்தமாக இணக்கம் பெற்றுள்ளனர்.
இந்த தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்குகள் அளித்து ஆதரவு வழங்கிய வீரமுனை வட்டாரத்தை கௌரவிக்கும் வகையில், முதலாவதாக சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் Acm Saheel அவர்களுக்கு பிரதேச சபை உறுப்புரிமை தலைவர் அல்-ஹாஜ் ALM அதாஉல்லாஹ் அவர்களால் வழங்கப்பட்டது.