மூன்று மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரும்பிய ஏழு இலங்கையர்கள், ரூ.18.6 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகளை கடத்த முயன்றதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இலங்கை சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
மூன்று வெவ்வேறு விமான நிறுவனங்களில் குவைத், துபாய் மற்றும் ஓமானில் இருந்து திரும்பிய இலங்கையைச் சேர்ந்த பயணிகள், தங்கள் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளை விமான நிலையத்தை விட்டு வெளியே கொண்டு செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
விமான நிலைய சுங்க அதிகாரிகளின் தகவல்படி, இவர்களால் கடத்தி வரப்பட்ட சிகரெட்டுகளை விற்பனை செய்வதும் பயன்படுத்துவதும் இலங்கையில் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம், கெகிராவா, கஹவத்த மற்றும் கொழும்பு போன்ற இடங்களைச் சேர்ந்த ஏழு ஆண் பயணிகளிடமிருந்தே சிகரெட் பாக்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ன.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.