Ads Area

சம்மாந்துறை பிரதேச செயலக Starlit வருடாந்த ஒன்றுகூடலும், கெளரவிப்பு நிகழ்வும்.

சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட Starlit-2024/2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு (26) பிற்பகல் 3.30 மணியளவில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் விமர்சையாக நடைபெற்றது. 


இந் நிகழ்வில் ஓய்வு பெற்று சென்ற  மற்றும் இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்களை கௌரவித்து நினைவு சின்னங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன்  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த(சா/த),(உ/த) பரீட்சைகளில் சித்தியடைந்த உத்தியோகத்தர்களின் பிள்ளைகளும் கெளரவிக்கப்படனர்.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட  அரசாங்க அதிபர் சிந்திக அபேவிக்ரம அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். 


அத்தோடு கெளரவ அதிதியாக  மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஏ.எல் மஹ்ரூப்,சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம் ஆஸீக்,அம்பாறை மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி அனீஸ்,சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டி.பிரபாசங்கர்,கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமில்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுசைன்,மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே ரினோஸா, அட்டாளைச்சேனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.பி சலீம்,கிராம நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.எம் நளீர், உட்பட திணைக்களங்களின் தலைவர்கள் காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


உத்தியோகத்தர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் அரங்கேரப்பட்டதுடன்,சிறப்பாக செயற்பட்ட உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரை பத்திரங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந் நிகழ்வில் ஓய்வு பெற்ற  முன்னாள் சிரேஸ்ட நிர்வாக அதிகாரிகளான ஏ.மன்சூர்,எம்.எம் நஸீர்,திருமதி ஆர்.யூ அப்துல் ஜலீல், மற்றும் முன்னாள் அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எல் ஆதம்பாவா ஆகியோர் பிரதேச செயலக நலன்புரி அமைப்பினால் கெளரவிக்கப்பட்டார்கள்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe