Ads Area

பாகிஸ்தான் செல்லும் அனைத்து விமானங்களையும் உடனடியாக நிறுத்தியுள்ளது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்.

பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் லாகூருக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் உடனடியாக நிறுத்தியுள்ளது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ். பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.


இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்கள், ஏனைய விமான சேவைகளின் ரத்துகள் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் போன்றன காரணமாக பாகிஸ்தானுக்கான விமான இடை நிறுத்தத்தை இலங்கையும் அமுல்படுத்தியுள்ளது. மாற்று பயண ஏற்பாடுகள், புதுப்பித்தல்கள் போன்றவற்றுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினை தொடர்பு கொள்ளுமாறும் பயணிகள் வேண்டிக் கொள்ளப்பட்டுள்னர்.


லாகூர் விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகள், மறு அட்டவணை அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான கூடுதல் தகவலுக்கு விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கேட்டுக் கொண்டது. இடைநிறுத்தத்தின் காலம் குறித்து மேலும் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. 


செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe