பாறுக் ஷிஹான்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமல், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல், போதைப்பொருள், நீதிமன்ற பிடியாணை மற்றும் போக்குவரத்து சட்டதிட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சிலரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்தோடு, மோட்டார் சைக்கிளையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மீட்டுள்ளனர்.
இச் சம்பவம் அண்மையில் (16) நடைபெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் வைத்து இக்கைது இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் நடவடிக்கையின் போது, 160 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 39 வயதுடைய சம்மாந்துறை மட்டக்களப்பு தரவை 02 பகுதியைச்சேர்ந்த ஒருவரும், நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுயிருந்த சந்தேக நபர்கள் இருவருமே இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், சில மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சம்மாந்துறை, சவளக்கடை, கல்முனை பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், இக்கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் ஆலோசனைக்கமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமாரவின் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

