Ads Area

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை.

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக  இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100  இலட்சம்  ரூபா நன்கொடை வழங்கியுள்ளனர்.


உலகளாவிய போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் செய்யிதினா  முபத்தல் சைபுத்தீன் அவர்களின் சார்பாக இலங்கை தாவூதி போரா சமூகத்தின் தலைவர் இப்ராஹிம் சயினியினால்  இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இதற்கான காசோலை கையளிக்கப்பட்டது.


பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும்  நிவாரணம் வழங்குவதற்கும்  இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு போரா சமூக பிரதிநிதிகள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்ததோடு அதற்காக தமது நன்றியையும் தெரிவித்தனர்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2025. 12. 02




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe