Ads Area

மாதம்தோறும் தொடர் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டு வரும் பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகான்.

பிரதேச சபையின் 7வது சபை அமர்வுக்கு முன்னதாக மக்கள் சந்திப்பில்  பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகான் ஈடுபட்டு வருகிறார். இம்  மக்கள் சந்திப்பானது அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியினுடைய எதிர்கால அரசியல் வெற்றிக்கானதும், வளர்ச்சிக்கானதுமாகும்.


சம்மாந்துறை  வீரமுனை வட்டாரத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினரான கௌரவ றிஸ்விகான் அவர்கள் தனது வட்டாரத்தில் தேர்தல் காலங்களில் தனது வெற்றிக்காக பாடுபட்ட வட்டார பிரதேச மக்களை ஒவ்வொரு மாதமும் ஒன்று கூட்டி அவர்களிடம் வட்டாரத்திற்கான தனது செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள், மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் உத்திகள் தொடர்பில் கலந்துரையாடும் ஒரு வேலைத்திட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.




எதிர்வரும் 2026-01-13 அன்று  நடைபெறவுள்ள சம்மாந்துறை பிரதேச சபையின் 7வது  சபை அமர்விற்கு முன்னதாக தனக்கு வாக்களித்த வட்டார மக்களுடனாான கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றினை பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகான்  2026-01-05 அன்று அவரது இல்லத்தில் இரவு  8.30  மணியளவில் ஏற்பாடு செய்து அதில் தனது வட்டாரப் பிரச்சினைகள் குறித்து மக்களோடு  கலந்தாலோசனை செய்துள்ளார்.





இக் கலந்துரையாடல் நிகழ்விற்கு வீரமுனைப் வட்டாரத்தில் தனது வெற்றிக்காக பாடுபட்ட சகல துறை சார்ந்த மக்களையும்  ஒன்று கூட்டி தனது அரசியல் செயற்பாடு, வட்டாரத்திற்கான தனது வேலைத்திட்டங்கள் தொடர்பில் எவ்வித ஒழிவு-மறைவின்றி மக்களோடு கலந்துரையாடி  சபை அமர்வில் பேசவிருக்கும் விடையங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து, வாக்களித்த மக்களின் கருத்துக்களும் கோரப்பட்டது.














Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe