Ads Area

மாவடிப்பள்ளி ஆற்றில் ச*ட**லமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த அஸ்ஜத் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

 மஜீட். ARM.


​மாவடிப்பள்ளி ஆற்றில் இன்று  (செப்டம்பர் 13) கண்டெடுக்கப்பட்ட ச*ட*லம்,  காணாமல் போன சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த இளைஞருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.


​சாய்ந்தமருது, பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய அஸ்ஜத் என்ற இளைஞரே இவ்வாறு மாவடிப்பள்ளி ஆற்றில் ச*ட*லமாக மீட்கப்பட்டுள்ளார்.


இவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயிருந்த நிலையில், தேடுதல் நடத்தி வந்த குடும்பத்தினரால் தற்போது ச*ட*லம் அடையாளம் காணப்பட்டுள்ளது.


​இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe