“உங்களுக்கு ஒரு வாழ்த்து கூறப்படும் பொழுது, அதற்குப் பகரமாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) வாழ்த்து கூறுங்கள்;. அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.” (அல்-நிஸாஉ 4: 86)
கிறகேரியன் கலண்டரை உபயோகிக்கும் மக்களுக்கு இன்று 2017 பிறந் திருக்கிகிறது.உங்கள் அண்டை அயலவர், சக தொழிலாளர்கள், வாடிக்ககையாளர்கள், நண்பர்கள் உங்களுக்கு வாழ்ததுச் சொன்னால் அழகிய பதிலை சொல்லுங்கள்.
இஸ்லாம், முஸ்லிம்கள் குறித்த குறுகிய எண்ணப் பதிவுகளை முஸ்லிம் அல்லாதோர் மனதில் ஏற்படுத்தாதீர்கள்.
மனித உறவுகளின் அரிச்சுவடி ஒருவருக்கொருவர் வாழ்த்துக் கூறிக் கொள்வதும் சுக துக்கங்களின் போது சந்தர்ப்பங்களுக் ஏற்ப வாழ்த்து, ஆறுதல் ,கவலை, அனுதாபம், பிரார்த்தனைகள் ,தெரிவித்துக் கொள்ளும் உயரிய பண்பாகும். இத்தகைய உயரிய மானுட விழுமியங்களை முன்னுள்ள சமூகங்களுக்கும் அல்லாஹ வலியுருத்தியிருந்ததை அல்குரானிய வசனங்களிலிருந்தும் ஹதீஸ் களிலிருந்தும் அறிந்து கொள்ள முடிகின்றது.
முஸ்லிம்களுக்கு எல்லா நாளும் எல்லா வேளையும் அழகிய தனித்துவமான வாழ்த்து ஒன்று இருக்கிறது. தும்மினாலும் பிரத்தியேகமான பிரார்த்தனைகள் இருக்கின்றன.
Masihudeen Inamullah.