ஓமான் நாட்டில் அரச பணிபுரியும் வெளிநாட்டினரை உடனடியாக பணி நீக்கம் செய்ய அந் நாட்டு அரசு உத்தரவு.
ஓமான் அரசாங்கத்தில் பணிபுரியும் வெளிநாட்டினரை, உடனடியாக பணியில் இருந்து நீக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதால், 6.5 லட்சம் இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வரலாறு காணாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஓமன் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.
தனியார் நிறுவனங்களும் இதைப் பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், வேலையிழப்பு மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டினருக்கு வேலை வழங்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஓமன் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
தகவல் - https://gulfnews.com