Ads Area

சம்மாந்துறையின் குடிகளும் அதன் பாரம்பரியங்களும்

தென்கிழக்கு முஸ்லீம்களின் வரலாற்றுப் பின்னணியிலும், சமுகங்களுக்கிடையிலான உறவிலும் குடி வழக்கு முறைகள் நீண்ட சரித்திரத்தை உடையன என்றால் மிகையாகாது. இந்துக்களிடத்திலிருந்துதான் இக்குடிமுறைக்கான பூர்வீக வரலாறு ஆரம்பமாகின்றது. இந்தியாவிலிருந்து வந்த முக்குவர் (முக்குகர்) வெள்ளாளர் (வேளாளர்) சீர்பாதக்காரர், பரவர் (பரதவர்) போன்ற குடிகளினாலும், கோத்திரங்களினாலும் குடிவழி மரபு தோன்றிருக்கின்றது.
இஸ்லாமிய வரலாற்றில் அராபியர்களினதும், முஸ்லிம்களினதும் கோத்திர பாரம்பரியமும், பரம்பரை அலகும் தந்தை வழியூடாகவே இருந்து வந்துள்ள கண்டிப்பான நியதிக்கு மாறாக தாய்வழி ஆதிக்கத்தையுடைய குடிப்பரம்பலைக் காணலாம்.
முக்குவர்கட்கும் திமிலர்கட்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியில், வியாபாரிகளாக வந்த முஸ்லிம்கள் தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. முக்குவர்கட்கும், உதவிய முஸ்லிம்களுக்குமிடையே திருமண உறவுகள் ஏற்படலாயின. முக்குவர்களிடையே இருந்து வந்த ஏழு அல்லது ஒன்பது குடிகளிலிருந்தும் பெண்கள் முஸ்லிம்களுக்கு திருமணத்தின் மூலம் உறவுப் பாலம் ஏற்படலாயிற்று. இதன் மூலம் முஸ்லிம்களின் இருப்பு இங்கு உறுதிப்படலாயிற்று. கிழக்கிலங்கை முஸ்லிம்களிடத்தில் மாத்திரம், குறிப்பாக தென்கிழக்கு முஸ்லிம்களிடத்தில் குடிவழிமுறை, சமுதாய அமைப்பு இருந்து வருவதை அவதானிக்கலாம்.
மட்டக்களப்பிற்கும் துலுக்கர், பட்டாணியர்களுக்கிடையிலான உறவுகள் இறுக்கமாக இருந்து வந்துள்ள ஆதாரங்கள் அனேகம். குலவிருதுகள் பற்றிய ஒரு பாடலில் :-
தோணிகரையாருக்கு தொப்பி துலுக்கருக்கு
காணியுழுமேழி களிகாராளருக்கு
நாணி வில்லம்பு……………
என்று தொடர்வதை அவதானிக்கலாம்.
இந்துக் கோவில்களில் பட்டாணி பூசையும், குறுமன்வெளிக் கோயிலில் தொப்பியணிந்த சிலையொன்று காட்சியளிப்பது போன்ற இன்னோரன்ன சம்பவங்கள் திராவிடர்களான முக்குவர்கட்கும், முஸ்லிம்களுக்கிடையிலான தொடர்புகள், திருமணப்பந்தங்கள், நிலைத்திருந்த உறவுகளை உதறிவிட முடியாது. அதன் தொடர்தான் குடிவழிமுறை நிலைத்திருப்பதற்கு அத்திவாரம்.
அரசியல் உதவிகளுக்காக, வேறு உபகாரங்களுக்காக மாறுபட்ட இனங்களுக்கிடையில் பெண்களை மணம்முடித்துக் கொடுக்கும் வழக்கம் ஒரு கர்ணபரம்பரை நிகழ்வுகளாக இருந்து வந்த இதிகாச சம்பவங்கள் அதிகம் எனலாம். இந்த வகையில் முஸ்லிம்களின் அனுபவங்களையும் அவர்களது திறமை, தொழில் முறையிலான எழுச்சி, வாழ்க்கை முறைகளினால் உள்ள நன்நோக்கங்கள் என்பவற்றிலுள்ள கவர்ச்சியும் முஸ்லிம்களை இங்கு வாழ வைப்பதில் திராவிடர்களுக்கு மேலும் உச்சாகத்தைக் கொடுத்திருக்கும். இப்படியான யதார்த்தங்களால் முஸ்லிம்களின் இருப்பு உறுதிப்பட்டதுடன், மேலும் பற்பல நிகழ்வுகளாலும், குடியேற்றங்களாலும் சனத்தொகை அதிகரித்து செல்லலாகின.
ஏழு அல்லது ஒன்பது குடிகளாக இருந்து வந்த முஸ்லிம்களிடத்தில் மேலும் குடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாயிற்று. ஏழு அல்லது ஒன்பது குடிகளின் பெயர்களிலும் திரிபுகள் ஏற்பட்டு பெயர்மாற்றமடைந்துமுள்ளன. தற்போது நடைமுறையிலுள்ள (சம்மாந்துறையில்) 31 குடிகளில் சுமார் 10 குடிகளின் பெயர்களில் முஸ்லிம் பெயர்கள் வெளிப்படுவதை அவதானிக்கலாம். சனத்தொகை அதிகரிப்பினாலும், வேற்றிடங்களிலிருந்து மக்கள் இங்கு குடிபெயர்ந்ததினாலும், சிங்கள மக்களின் கலப்பினாலும், இந்திய முஸ்லிம்களின் வருகையினாலும் சமூக கலாசார விழுமியங்களின் கலப்புக்களினாலும், ஒரு குடிக்குள்ளேயே அதிகாரப்போட்டி காரணமாக பிளவுபட்டதினாலும் குடிகளின் தொகை அதிகரித்தன என்றால் மிகையாகாது. 1940ஆம் ஆண்டில் கூட்டப்பட்ட குடிக்கூட்டத்தில் 16 குடிகள் மாத்திரம் இருந்துள்ளதான ஆவணம் ஒன்று கிடைத்துள்ளது. ஒரு குடியென்பது ஒரு மக்கள் குழுமத்தைக் குறிக்கும் சொற்பிரயோகம் எனலாம். இக்குடியில் இடம்பெறும் எந்த நிகழ்வானாலும் அது சமயம் சார்ந்த, திருமணம் சார்ந்த எந்த முக்கிய நிகழ்வுகளிலும் அந்தந்த குழுமத்தின் தலைவர், குடிமரைக்கார் பங்குபற்றாமல் அந்நிகழ்வு நடைபெறாது. அந்தளவுக்கு அன்று இம்மரபுவழி வந்த சட்டமாக மதித்து மக்கள் வாழலாயினர்.
எமது பண்பாட்டு அம்சமாக விளங்கிக் கொண்டிருக்கும் இக்குடிமுறை நமது பள்ளிவாசல் அமைப்பான மஜ்லிஸ் அஷ்ஷ_றாவிலும் உள்ளடக்கப்பட்டிருப்பதையும் காணலாம். ஏன்றாலும் இன்றைய காலகட்டத்தில் இக்குடிமுறை பேணப்படல் அவசியமா? இஸ்லாமிய அடிப்படையில் தந்தை வழிக்கு இக்குடிமுறை மாற்றியமைத்தால் என்ன? என்பன போன்ற கருத்துக்களுமஇன்று முன்வைக்கப்பட்டிருப்பதையும் சிந்திப்போமாக. என்றாலும் எமது பாரம்பரியத்தின் வரலாற்றை அறியுமுகமாக தற்போது வழங்கப்பட்டு வருகின்ற குடிகளின் பட்டியலை அவதானிப்போமாக.
குடிகள் குடிமரைக்கார்
01. கணக்கன்கத்தர குடி அல்-ஹாஜ் எஸ்.எம்.வதூர் ஜே.பி
02. மாமனாப்போடி குடி அல்-ஹாஜ் எஸ்.எம்.முகம்மது முஸ்தபா ஜே.பி (ஓய்வு . ஜீ.எஸ்)
03. தேன்முதலிக்குடி (கொசுக்குட்டான்) அல்-ஹாஜ் ஏ.எல்.ஹபீப் முகம்மட் (T.O)
04. பெரிய வெள்ளரசன் குடி ஜனாப் எம்.ஏ.முகைடீன் (ஜே.பி)
05. சங்கதி குடி அல்-ஹாஜ் எஸ்.எல்.ஆதம்பாவா (ஜே.பி) (ஓய்வு. கல்விப் பணிப்பாளர்)
06. இராசாம் புள்ள குடி அல்-ஹாஜ் கே.எம்.முஸ்தபா (ஜே.பி) ஓய்வு அதிபர்
07. சுல்தான் குடி அல்-ஹாஜ் ஏ.எல்.சம்சுதீன் (ஓய்வு வங்கி உத்தியோகத்தர்)
08. கோசப்பா குடி (பள்ளிக் குடி) அல்-ஹாஜ் எஸ்.அப்துல் றாஸீக் ஜே.பி (ஓய்வு அதிபர்)
09. சின்ன வெள்ளரசன் குடி அல்-ஹாஜ் ஆ.ணு.அகமட் லெப்பை (ஓய்வு ஆசிரியர்)
10. சேனைக் குடி அல்-ஹாஜ் யூ.எல்.இப்றாலெப்பை (வர்த்தகர்)
11. பெரிய படையான் குடி அல்-ஹாஜ் எம்.ஐ.ஹனீபா (யு.ஐ)
12. ஆதம்பட்டாணி குடி (சோழிய குடி) அல்-ஹாஜ் எம்.டி.எம்.சஹீட் (பணிப்பாளர்)
13. நெயினா ஓடாவி குடி அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.யாசின் (ஜே.பி.) ஓய்வு அதிபர்
14. ஓடாவி குடி அல்-ஹாஜ் ஏ.எம்.இஸ்மாயில் (படவரைஞர்)
15. வடக்கன்னா குடி அல்-ஹாஜ் மௌலவி ஏ.அப்துல் றகுமான்
16. மாந்தரா குடி அல்-ஹாஜ் எம்.கலந்தர் லெப்பை போடி
17. செட்டி புள்ளக் குடி அல்-ஹாஜ் எம்.ஏ.தம்பிக்கண்டு (ஓய்வு பிரதிக் கல்விப் பணிப்பாளர்)
18. உதுமான் புள்ள குடி ஜனாப் . எம்.ஏ.அலியார் போடி
19. உலவிப் போடிக் (சாயக்காரன்) குடி அல்-ஹாஜ் ஏ.முகம்மட் தம்பிப் போடி
20. ஆராய்ச்;சிக் குடி அல்-ஹாஜ் எம்.எல்.எம்.இஸ்மாயில் போடி (பட்டிசிங்கிபவள ஆராய்ச்சி)
21. மாப்பிள்ளை மரைக்கார் குடி அல்-ஹாஜ் எம்.எஸ்.எம்.சிறாஜுடீன் (ஆசிரியர்)
22. கச்சன் ஓடாவி குடி அல்-ஹாஜ் எம்.பக்கீர் முகையடீன் (வர்த்தகர்)
23. பொன்னாச்சி குடி அல்-ஹாஜ் ஏ.எல்.இஸ்மாயில் (வர்த்தகர்)
24. சேர் முகம்மட் குடி(சேகு முகம்மது) அல்-ஹாஜ் எம்.ஐ.சின்னராசா (ஜி.எஸ்)
25. பெரிய படையான்ட குடி அல்-ஹாஜ்எஸ்.எம்.வரிசை முகம்மட் (வர்த்தகர்)
26. மடத்தடி குடி (மரத்தடி குடி) ஜனாப். யூ.எல்.நவாஸ் (அரச உத்தியோகத்தர்)
27. மூத்த நாச்சியார் குடி அல்-ஹாஜ் ஏ.எல்.அலியார் (ஜே.பி) ஓய்வு அதிபர்
28. பணிக்கனா குடி அல்-ஹாஜ் ஏ.நசுருதீன் (டீயு, பிரதி அதிபர்)
29. கையூம் மலையார் குடி(கைமலயார்) அல்-ஹாஜ் மன்சூர் ஏ.காதர் (பதிவாளர்)தெ.கி.ப.கழகம்)
30. மலையாளத்து லெப்பை குடி அல்-ஹாஜ் மௌலவி எம்.ஆதம் லெப்பை (அழகு வெற்றிலைக் குடி) ஆசிரியர (ஜே.பி.)
31. வைத்தியநாச்சியார் குடி அல்-ஹாஜ் யூ.எம்.முஸ்தபா (ஜே.பி) ஓய்வு அதிபர்
குடிமரைக்கார் மார் 31பேரும் குடிமரைக்கார்மார் சம்மேளனம் என ஒரு நிறுவணமாக இயங்கிவருகின்றனர். சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையில் குடிமரைக்கார்மார் சம்மேளனத்தின் சார்பாகவும் ஒரு நம்பிக்கையாளர் அங்கத்துவம் பெறுகின்றார். சென்ற காலத்தில் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.யாசீன் ஜே.பி. அவர்களும் தற்போது அல் ஹாஜ் கே.எம்.முஸ்தபா ஜே.பி. அவர்களும் நம்பிக்கையாளர் சபையில் இடம் பெற்றனர். சில குடிகளுக்கு இரட்டைப் பெயர்கள் இருக்கின்றன. அந்தவகையில் குடிமரைக்கார்மார் பட்டியலில் அடைப்புக்குறிக்குள் இருப்பது அக்குடியின் மறு பெயராகும். ஓவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு குடிவிருதுகள் (அடையாளம்) இருந்து வந்துள்ள சம்பிரதாயங்களும் உண்டு. மாடுகளுக்கு குறி வைக்கும் போது இது பேணப்பட்டு வந்துள்ளது. தற்போதும் சிலர் பாவிப்பதுண்டு. வேலி கட்டும் போது அக்குடிக்கான அடையாளம் இடம் பெறுவதாகவும் கதைப்பார்கள். திருமண நிகழ்வின் போது அக்காலத்தில் மேளம் அடித்து திருமணத்தை அமர்க்களப்படுத்துவர். அப்போது மேளக்காரர் மேள வாத்தியங்களில் அக் குடிக்கான ஓசையை எழுப்புவதாகவும் அறியமுடிகின்றது. குடிப் பாரம்பரியம் நமது பண்பாட்டு அம்சங்களில் மிக முக்கியமான இடத்தை வகித்து வந்துள்ள பிடிமானத்தை அறிகின்றோம். சென்ற காலங்களில் குடிமரைக்கார்மார்கள்தான் பள்ளிவாசல்களின் நிருவாகத்தை நடாத்தி வந்துள்ள ஆதாரங்களும் நிறையக் கிடக்கின்றன. மரைக்கார் என்பது “மறை”யை – மார்க்கத்தை – காப்பவர் என்பதாகும். அதன் அடிப்படையில்தான் மரைக்கார் என்ற பதம் நிலைபெற்றிருக்கலாம்.
சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பள்ளிவாசல்களில் பின்வருபவை மஜ்லிஸ் அஷ்ஷ{றா நிருவாகத்தில் இல்லாதவைகளாகும்.
நெய்னாகாடு
01. மஸ்ஜிதுல் ஹயாத்து நபிகுடி ஜும்ஆ பள்ளிவாசல்
02. மஸ்ஜிதுல் றஹ்மானியா பள்ளிவாசல்
வளத்தாபிட்டி
01. மஸ்ஜிதுல் உலாஹ் ஜும்ஆ பள்ளிவாசல்
02. மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் மஜீட் புரம்
01. மஜீட்புரம் ஜும்ஆ பள்ளிவாசல்
02. மஸ்ஜிதுல் இக்ராம் பள்ளிவாசல்
03. மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் - கணபதி புரம்
அல் ஹாஜ். எஸ்.அப்துல் றாஸிக் ஜே.பி. ஓய்வு - அதிபர் தவிசாளர் , சம்மாந்துறை மத்தியஸ்தர் சபை - 2009.05.09.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe