Ads Area

இழுபறிகளுக்குப் பின்னர் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக ஏ.எம்.எம். நௌசாட் தெரிவு.

நடைபெற்று முடிந்த பிரதேச சபைத் தேர்தலின் பின்னர் சம்மாந்துறைப் பிரதேச சபையின் புதிய தவிசாளர் யார் என்ற கேள்வி பல தரப்பினராலும் நாள்தோறும் கேட்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நீண்ட  இழுபறியின் பின்னர் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் சார்பில் சம்மாந்துறையில் களமிறக்கப்பட்ட முன்னாள் பா.உ.உறுப்பினரும், முன்னாள் தவிசாளருமான கௌரவ ஏ.எம்.எம். நௌசாட் அவர்கள் புதிய தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார் அத்தோடு உப தவிசாளராக கௌரவ வீ. ஜெயச்சந்திரன் அவர்கள் (SLFP) தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

கிழக்கு மாகாண உள்ளுராச்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இடம் பெற்ற தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளர் ஆகியோரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் மற்றும் சிரிலங்கா சுதந்திரக் கட்சி கூட்டுக்கு ஆதரவாக 12 வாக்குகள் பெறப்பட்டதுடன் எதிராக முஸ்லிம் காங்ரஸினைச் சேர்ந்த 8 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தலைவர் றிசாத் பதியுத்தீன் அவர்களுக்கும் சிரிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட உத்தியோகத்தவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முடிவினை அடுத்தே சம்மாந்துறைப் பிரதேச சபையில் இக் கூட்டாச்சி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

பட உதவி - மொஹமட் ஹனீபா.













Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe